பழங்கால சிலைகளை பதுக்கியதாக மூன்று பேர் கைது

கோவை, நவம்பர்.24

கோவையில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் மற்றும் அரிய பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் நேற்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருந்த ஐம்பொன் சிலைகளான சரஸ்வதி, நாகதேவி சிலைகளைக் பறிமுதல் செய்தனர். 



மேலும், செம்பு வளையல்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் 2 சங்கு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் மீட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பீளமேடு  பகுதியைச் சேர்ந்த பசந்திரசேகரன் (48),பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (34) மற்றும் இடையர்பாளையம் சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெயபாண்டியன் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான மூன்று பேரும் சிலைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தியதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, கைதான மூன்று பேரையும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...