வாகன தணிக்கையின் போது நடந்த விபத்தில் காவலர் பலி

கோவை, நவம்பர்.24

கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31). 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது.  அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார்.  இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...