கோவை, நவம்பர்.24
கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31).
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31).
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.