சின்னம் முக்கியம் இல்லை, வேட்பாளர்தான் முக்கியம்- கோவையில் டி.டி.வி தினகரன் பேட்டி

கோவை, நவம்பர் 24

அதிமுக-வின் அடையாளமாகக் கருதப்படும் இரட்டை இலை சின்னத்தினை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதையடுத்து சின்னம் முக்கியமில்லை எனவும், வேட்பாளர்தான் முக்கியம் என்றும் அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார்.



இன்று கோவை வந்த டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை சுயேட்சையாகத் தான் போட்டியிட்டோம். அப்போதே எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இரட்டை இலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். முதலமைச்சரால் தொடரப்பட்டுள்ள கேவியட் மனு சாதாரண நடைமுறை தான். அதிமுக மற்றும் சின்னம் ஒரு பொருளாக மாறிவிட்டது.

தேர்தல்களைப் பொறுத்தவரையில் வேட்பாளர் யார் என்பது தான் முக்கியம். சின்னம் பிறகு தான். தற்போது எங்கள் அணியின் சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். ஆர்.கே.நகர் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரியும்.

மதுசூதனன் எந்த அடிப்படையில் 'ஏ' மற்றும் 'பி' ஃபார்ம்-ஐ நிரப்புவார் எனத் தெரியவில்லை. மைத்ரேயன் கருத்தைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை. இன்னும் ஒரு மாதத்தில் யாருக்கு டெபாசிட் என்பது தெரியும். வாக்கு வங்கி என்பது கட்சிக்குத் தான். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலை பொருத்தவரை இரண்டும் துரோகிகள் கையில் சென்றுள்ளதால் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள். ஆட்சி மட்டும் இல்லாவிட்டால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.

இந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் 27 முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒரு நாளில் தாக்கல் செய்யப்படும். அந்தத் தொகுதி அதிமுக-வின் கோட்டை. எனவே அதிமுக வெற்றி பெறும். அவர்களுக்கு வாக்கு வங்கியே கிடையாது" என்றார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...