ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நவம்பர் 24 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே கஸாங் மற்றும் லிகபல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள சிகந்த்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சபாங் உள்ளிட்ட காலியானத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதி ஆகும். டிசம்பர் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...