திருப்பூர், நவம்பர் 24
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூரில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர்.
இதில், அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூரில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர்.
இதில், அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.