பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், நவம்பர்  24

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர். 

இதில்,  அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...