சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டு

நவம்பர் 23

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலைச்சின்னம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அணியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்எல்ஏக்கள் இருந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது, சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. ஆனால், இப்போது அந்த தீர்ப்பை பின்பற்றியுள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்பது இந்திய மககள் அனைவருக்கும் தெரியும். 

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். சாதிக் அலி வழக்கு, அதிமுகவிற்கு பொருந்தாது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம், மத்திய அரசின் விருப்பத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது நிருபணமாகி உள்ளது. 

இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளது. 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது, இரட்டை இலை சின்னம், குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது. அதை மீட்போம். தேர்தல் ஆணையம் தீர்ப்பு மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது நிருபணமாகி உள்ளது. அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆர்கே நகர் தேர்தலில் நான் தான் மீண்டும் போட்டியிடுவேன். வெற்றி பெற்று, இரட்டை இலையை மீட்பேன். தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல உள்ளது. இவ்வாறு தினகரன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...