தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு

நவம்பர் 23

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகை செய்யும் சட்ட வரைவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர், தமிழக சட்டசபையில் இதற்காகச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை முழுவதுமாக நீங்கியது. 

இதேபோல, புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அது எதிர்ப்பின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இனி, இந்தச் சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் சட்ட வடிவம் பெறும்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...