கோவை, நவம்பர் 23
எதிர்கால வாக்காளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினாப் போட்டி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியத் தேர்தல் ஆணையம், எதிர்கால வாக்காளர்களாகிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 9 முதல் 12–ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வினாடி வினாப் போட்டியை நடத்துகிறது. கோவை மாவட்டத்தில் 53 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவர்கள், மாவட்ட அளவிலானப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் கௌரவிக்கப்படுவதுடன், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்படுவர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பள்ளியிலிருந்து இரு மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலானப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்கால வாக்காளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினாப் போட்டி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியத் தேர்தல் ஆணையம், எதிர்கால வாக்காளர்களாகிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 9 முதல் 12–ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வினாடி வினாப் போட்டியை நடத்துகிறது. கோவை மாவட்டத்தில் 53 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவர்கள், மாவட்ட அளவிலானப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் கௌரவிக்கப்படுவதுடன், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்படுவர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பள்ளியிலிருந்து இரு மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலானப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.