நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ உண்மை என தில்லி தடயவியல் ஆய்வகம் உறுதி

நவம்பர் 23

திரைப்பட நடிகை ரஞ்சிதா உடன் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா உல்லாசமாக இருப்பது போல் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீடியோ உண்மையானது என தில்லி தடயவியல் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பிடதியில் உள்ள ஆசிரமத்தில் திரைப்பட நடிகையான ரஞ்சிதா சாமியார் நித்தியானந்தா உடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் அவரது கார் டிரைவர் லெனின் கருப்பன் மூலம் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, நித்தியானந்தா தலைமறைவானார்.

அவருக்குச் சொந்தமான பெங்களூரு, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரமங்கள் முன் மக்கள் போராட்டம் நடத்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதற்கிடையில், திருவண்ணாமலை அருகே நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு ஆண்மையே இல்லை. வீடியோவில் இருப்பது தான் இல்லை. அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா வாதாடினார். பின், ஆண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி-யை தில்லியிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிஐடி-க்கு தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...