இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கோவை, நவம்பர் 22

பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத்துறையின் (எம்.எஸ்.டி.இ) சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் குறைந்தபட்சம் 5-வது படித்திருந்தால் போதுமானது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளித் தொழில் சங்கங்களில் இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த அமைப்பானது, ஜவுளித்துறையில் பல்வேறு விதமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்கும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுபவமில்லாத 50,000 பேருக்கு, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...