கிராமங்கள் வழியாக செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி


கோவை, நவம்பர் 22

கோவை கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க கிராமங்கள் வழியாக செல்லும் சிறிய மற்றும் கனரக வாகனங்களால் அப்பகுதி மக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கோவையிலிருந்து சேலம் வழியாக கார்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பாலக்காடு வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்ல முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக NH 47 திகழ்கிறது. மத்திய அரசாங்கத்தின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கிழ் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு கடந்த ஈராண்டுக்கு முன் இச்சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் சுங்கச்சாவடி கட்டண மையம் அமைக்கப்பட்டது. சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசித்து வருவோர் அடையாள சான்றிதழ் காட்டி சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்.

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க வாகனங்கள்   கணியூர் அருகே வரும் போது அருகில் உள்ள கிராமங்களான தென்னம்பாளையம், சோமனூர், சின்னியம்பாளையம், மோரிப்பாளையம், முதலிபாளையம் வழியாக செல்கின்றன. கிராம சாலைகள் மிகவும் குறுகலாகவும், நெடுஞ்சாலைகளை விட தரம் குறைந்ததாகவும் உள்ள காரணத்தினால் சேதம் அடைக்கின்றன. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலை வழியாக  தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும், சாலையில் இருசக்கர வாகனத்தின் பயணிப்போர் விபத்துகளில் சிக்குவதும் அதிக அளவில் ஏற்படுகின்றன என கிராம வாசிகள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பா. பூபாலன் கூறுகையில் “ சுங்கச்சாவடி கட்டணம் காரணமாக வாகனங்கள் கிராமங்கள் வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. கிராமபுறச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்க தடுப்புகள் வைக்கப்படுகிறது ஆனாலும் அதனை மீறி வாகனங்கள் உள்ளே வந்து செல்கின்றன” என்றார்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அப்பகுதிகளில் செல்வதால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர்

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்” கனரக வாகனங்கள் கிராமப்புற சாலை வழியாக செல்வதை மட்டுமே தடுக்க முடியும். சிறிய ரக வாகனங்கள் செல்வதை தடுக்க இயலாது. எனினும் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.” என்றார்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தி வாகனங்களின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்களுக்கு தீர்வு ஏற்படும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.    

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...