உதவித் தொகைக் கோரி எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குழந்தையுடன் மனு


கோவை, நவம்பர் 20: அரசின் உதவித்தொகையை வழங்கக்கோரி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குபேந்திரன். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இவர், கோபியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பால்வினை நோய்க்கு மருந்துகள் எடுத்து வருவதாக கூறிய அவர்கள், அரசு வழங்கும் உதவித்தொகைக் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மனு அளித்தும் எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தரும் அரசு, அதற்கான உதவி தொகையை அளிக்காமல் இழுத்தடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் பிரசவகால உதவித் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தம்பதியினர், அரசு தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரைவாக உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...