அமைச்சர்கள் மீது லஞ்சம், ஊழல் புகார்கள் இருப்பதை உணர முடிகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 15

தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் சிமெண்ட் கலவையை கொண்டு சாலையை சரி செய்தனர். 



அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் சாலை பாரமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சணைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மேலும், தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...