கோவை மாநகராட்சியில் சுகாதார அலுவலர் உண்ணாவிரத போராட்டம்

கோவை, நவம்பர் 15: சுகாதார அலுவலருக்கு உண்டான சம்பளம், அலுவலகம், களப்பணி செய்ய வாகனங்கள் கொடுக்காமல் மெத்தனமாக செயல்படும் கோவை மாநகராட்சியை கண்டித்து, நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுகாதார அலுவலர் தொடங்கினர்.

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரியும் பிச்சைமணி, சிவநேசன், அருணகிரி, ராமச்சந்திரன், திருமால், உள்ளிட்டவர்களுக்கு சுகாதார அலுவலராக அரசு ஆணை எண் 182 ன் படி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

உத்தரவு வழங்கப்பட்டும் இதுநாள் வரை சமபள உயர்வு, அலுவலகம், மற்றும் பணி இடம் வழங்கப்படவில்லை.

மேலும் களபணி செய்ய வாகன வசதிகள் செய்து தராமல், அமைச்சரின் உறவினரை காரணம் காட்டி இளையோர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டு அடிமைகள் போல் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஆட்சிப்பணி உறுதி மொழிக்கு எதிராகவும், தமிழ்நாடு மாநில லீகல் சர்வீஸ் அதராட்டி ஆணையை மதிக்காமல் செயல்படும் மாநகராட்சி ஆணையரை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பிச்சை மணி இருந்து வருகிறார். 

மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இருந்தும், உள்ளாட்சி நகராட்சித்துறை அமைச்சரை ஆணையர் சந்திக்கச்சொல்வதை கண்டித்தும் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...