உயர்கல்விக்கான விருது பெற விண்ணப்பிக்க நாளைக் கடைசிநாள்

கோவை, நவம்பர் 14 

தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகம் சார்பில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகத்தின் சார்பில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. உயர்கல்வியில் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள், சிறந்து விளங்கியவர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த தலைமையாசிரியர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

வரும் 25-ம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகின்றது. தகுதியானவர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...