பள்ளியில் தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்

கோவை, நவம்பர் 14: கோவை அருகே தனியார் பள்ளியில் சக மாணவிகளிடம் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 9-ம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இன்று சமூக ஆர்வலர் மரீனா-வுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். தான் படிக்கும் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பள்ளியில் சேரும் கழிவுநீரையும் கற்களையும் மாணவ, மாணவிகளைக் கொண்டே அகற்றுகின்றனர். 

மேலும் பள்ளியில் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசியதற்காக அபராதம் விதிக்கின்றனர். கடந்த வாரம் நான் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்ததால் பேருந்தில் வர முடியாமல் நடந்தே வீட்டிற்கு வந்தடைந்தேன். 

பள்ளி நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்தும், எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் பெற்றோரை தரக்குறைவாக பேசுகின்றனர். மகள் மனவேதனை அடைந்ததால் வேறு வழியில்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். தனது மகளை போலவே பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் சொல்லக்கூட பயந்து கொண்டு சொல்லாமல் உள்ளனர் என்றார் மாணவியின் தந்தை.

மாணவியின் குடும்பம் தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தன்னை தொடர்பு கொண்டு பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்தே அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அழைத்து வந்தேன் என்றார் சமூக ஆர்வலர் மரீனா.

குறிப்பாக பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியர் கார்த்திக், மாணவிகளிடம் அத்துமீறி நடத்து கொள்கிறார். கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் தெரிவித்ததால் ஆட்சியரிடம் புகார் அளிக்க அவர்களை அழைத்து வந்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...