அரசின் மானிய விலை வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 13

உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 50 சதவீதம் மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி வரை பெறப்படுகின்றன.

இது தொடர்பாக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2017-18ம் ஆண்டிற்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழைகளிலான பரிசல்கள் வாங்கிட 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என மீன்வளத்துறை பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை  அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி,  2017-18 ம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.

விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு 16.62 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். பங்கு மீனவர்கள்/உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே கடந்த 5 வருடங்களுக்குள் வலை மற்றும் கண்ணாடி நூலிழையிலான பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 20ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு (தொலைபேசி -0424 - 2271912) கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...