உடுமலை அருகே ஐந்தரை லட்சம் கொள்ளை

திருப்பூர், நவம்பர் 13

உடுமலை அருகே அதிகாலையில் மளிகைகடையின் பூட்டை உடைத்து ஐந்தரை லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை..

தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியக்கோட்டை பிரிவில் மளிகை கடை நடத்தி வருபவர் சாந்தி (50) இவர் நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க முற்படும் போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்களிடம் சாந்தி கேட்ட போது அதிகாலையில் இரண்டு மேற்பட்ட நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி விட்டு தப்பி சென்றதை பார்த்து டீ கடையில் பணி புரிந்த ஊழியர்கள் அவர்களை துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை என டீ கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இதற்கிடையில்  சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் விவசாயிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் நடந்து இருக்கும் தருவாயில் இக் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சேமித்து வைத்து இருந்த ஜந்தரை லட்சம் அதிகாலையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்வம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காவல் துறையினர் கூடுதலாக இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...