திருப்பூர், நவம்பர் 13
உடுமலை அருகே அதிகாலையில் மளிகைகடையின் பூட்டை உடைத்து ஐந்தரை லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை..
தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியக்கோட்டை பிரிவில் மளிகை கடை நடத்தி வருபவர் சாந்தி (50) இவர் நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க முற்படும் போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்களிடம் சாந்தி கேட்ட போது அதிகாலையில் இரண்டு மேற்பட்ட நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி விட்டு தப்பி சென்றதை பார்த்து டீ கடையில் பணி புரிந்த ஊழியர்கள் அவர்களை துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை என டீ கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் விவசாயிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் நடந்து இருக்கும் தருவாயில் இக் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
சேமித்து வைத்து இருந்த ஜந்தரை லட்சம் அதிகாலையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்வம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காவல் துறையினர் கூடுதலாக இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உடுமலை அருகே அதிகாலையில் மளிகைகடையின் பூட்டை உடைத்து ஐந்தரை லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை..
தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியக்கோட்டை பிரிவில் மளிகை கடை நடத்தி வருபவர் சாந்தி (50) இவர் நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க முற்படும் போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்களிடம் சாந்தி கேட்ட போது அதிகாலையில் இரண்டு மேற்பட்ட நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி விட்டு தப்பி சென்றதை பார்த்து டீ கடையில் பணி புரிந்த ஊழியர்கள் அவர்களை துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை என டீ கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் விவசாயிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் நடந்து இருக்கும் தருவாயில் இக் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
சேமித்து வைத்து இருந்த ஜந்தரை லட்சம் அதிகாலையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்வம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காவல் துறையினர் கூடுதலாக இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.