கோவை, நவம்பர் 13
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருவதாகத் தொடர்ந்து விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், 'சமீப காலமாக காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன . இதுதொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்' எனத் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருவதாகத் தொடர்ந்து விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், 'சமீப காலமாக காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன . இதுதொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்' எனத் தெரிவித்தனர்.