இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு

நவம்பர் 10

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி ஆல்ரவுண்டர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பிடிக்காமல் இருந்த அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். மற்றபடி இந்திய டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு : 

1. விராட் கோலி (கேப்டன்), 2. லோகேஷ் ராகுல், 3. முரளி விஜய், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே, 7. ரோகித் சர்மா, 8. சகா (விக்கெட் கீப்பர்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. குல்தீப் யாதவ், 12. மொகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. புவனேஸ்வர் குமார், 15. இசாந்த் ஷர்மா.

இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில், சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நாளை (நவம்.,11) தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் அணி வருமாறு:-

சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக்குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ்கான், சக்சேனா, ஜிவான்ஜித்சிங், ரவிகிரண், ரோகன் பிரேம், சந்தீப், தமய் அகர்வால், சந்தீப் வாரியா, அமோல் பிரீத்சிங்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...