கோயம்புத்தூர், நவம்பர் 10: கோவையில் லயன்ஸ் மாவட்டம் 324 பி1, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர்.வி.ராஜேந்திரன் டயபட்டிக் சென்டர் ஆகியவை இணைந்து இன்று (10.11.2017) கோவை மாநகரம் முழுவதும் 60 இடங்களில் இலவச சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாமை நடத்தின.

இதன் துவக்க விழா காலை 8.00 மணிக்கு மத்திய அரிமா சங்கம் சார்பில் கோவை இயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் இரயில்வே பயணிகளுக்கு இலசவ பரிசோதனை நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் மாவட்ட தலைவர் லயன் மெக்சன் பாலு தலைமை வகித்தார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கே. காளிச்சாமி முன்னிலை வகித்து முகாமை துவக்கிவைத்தார்.
கோவை இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் எல்.சின்னராஜு தலைமை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ரோட்னி மோரீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த முகாம் குறித்து திரு. காளிச்சாமி கூறியதாவது :- உலகளவில் இன்று நீரிழிவு நோய் என்பது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திடும் வகையில் உள்ளது.
பல்வேறு நாடுகளிலும் இந்நோய் பரவலாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 8 முதல் 10 சதவீதம் வரை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு லயன்ஸ் சங்கம் உலகளவில் இந்த முகாம் திட்டத்தை முதன்மையாக எடுத்து செயல்படுத்தி வருகின்றது.
கோவையில் இன்று நடைபெறும் 60 முகாம்களில் தலா 250 முதல் 300 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் சர்க்கரை நோய் விழித்திரை பரிசோதனைக்கு கோவை அவினாசி ரோடு மீனாட்சி மஹாலில் வரும் 14 ம் தேதி நடைபெறும் முகாமில் பரிசோதித்துக் கொள்ளலாம்.
அதற்கு மேலும் கண் விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் நவம்பர் மாதம் இறுதி வரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று முற்றிலும் இலவசமாக வழித்திரை பரிசோதனை மற்றும் லேசர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாமானது கோவையை தொடர்ந்து வரும் 14 - ம் தேதி திருப்பூரில் 60 இடங்களிலும், 17 - ம் தேதி பொள்ளாட்சியில் 33 இடங்களிலும், உடுமலையில் 9 இடங்களிலும், 21 - ம் தேதி உதகையில் 17 இடங்களில் என ஆகமொத்தம் 177 இடங்களில் முகாம் நடத்தி சுமார் 50,000 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதன் துவக்க விழா காலை 8.00 மணிக்கு மத்திய அரிமா சங்கம் சார்பில் கோவை இயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் இரயில்வே பயணிகளுக்கு இலசவ பரிசோதனை நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் மாவட்ட தலைவர் லயன் மெக்சன் பாலு தலைமை வகித்தார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கே. காளிச்சாமி முன்னிலை வகித்து முகாமை துவக்கிவைத்தார்.
கோவை இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் எல்.சின்னராஜு தலைமை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ரோட்னி மோரீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த முகாம் குறித்து திரு. காளிச்சாமி கூறியதாவது :- உலகளவில் இன்று நீரிழிவு நோய் என்பது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திடும் வகையில் உள்ளது.
பல்வேறு நாடுகளிலும் இந்நோய் பரவலாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 8 முதல் 10 சதவீதம் வரை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு லயன்ஸ் சங்கம் உலகளவில் இந்த முகாம் திட்டத்தை முதன்மையாக எடுத்து செயல்படுத்தி வருகின்றது.
கோவையில் இன்று நடைபெறும் 60 முகாம்களில் தலா 250 முதல் 300 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் சர்க்கரை நோய் விழித்திரை பரிசோதனைக்கு கோவை அவினாசி ரோடு மீனாட்சி மஹாலில் வரும் 14 ம் தேதி நடைபெறும் முகாமில் பரிசோதித்துக் கொள்ளலாம்.
அதற்கு மேலும் கண் விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் நவம்பர் மாதம் இறுதி வரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று முற்றிலும் இலவசமாக வழித்திரை பரிசோதனை மற்றும் லேசர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாமானது கோவையை தொடர்ந்து வரும் 14 - ம் தேதி திருப்பூரில் 60 இடங்களிலும், 17 - ம் தேதி பொள்ளாட்சியில் 33 இடங்களிலும், உடுமலையில் 9 இடங்களிலும், 21 - ம் தேதி உதகையில் 17 இடங்களில் என ஆகமொத்தம் 177 இடங்களில் முகாம் நடத்தி சுமார் 50,000 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.