நவம்பர் 09 : தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் ”கேன்செல்லர் பவுண்டேசன்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் புற்றுநோயிக்கு எதிரான போராட்டம் என்ற நோக்கில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 11-ம் தேதி சித்ரா கருத்தரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நடத்துகின்றனர். 1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த படங்களின் பாடல்கள் பாடப்படுகிறது. இதில், பங்கேற்கும் பார்வையாளர்களிடம் இசை அல்லது இந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு, முதலில் பதிலை கூறுபவருக்கு, தனக்கு பிடித்தமான பாடலை மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ரூ.250 மற்றும் ரூ500 டிக்கெட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டணத் தொகையானது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ”பாடவா உன் பாடலை” இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை திரு. பத்மநாபன் (95004 -98333), திரு.கிருஷ்ணசுவாமி (98430 - 46664) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.