விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் --- சந்தை மதிப்பை வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 6: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சந்தை மதிப்புத் தொகையினை வழங்கக் கோரி சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று  மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...