கோவை, நவம்பர் 6: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சந்தை மதிப்புத் தொகையினை வழங்கக் கோரி சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.