கோவை, நவம்பர்.5: சார்ஜாவில் இருந்து 583 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சார்ஜாவிப் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சனிக்கிழமை அதிகாலை கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகம்மது சலீ (29) என்பதும் வயிற்றுபகுதியில் வைத்து 583 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகள் கடத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்ஜாவிப் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சனிக்கிழமை அதிகாலை கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகம்மது சலீ (29) என்பதும் வயிற்றுபகுதியில் வைத்து 583 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகள் கடத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.