லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் : காவல் கண்காணிப்பாளரிடம் வசமாக மாட்டினர்


கோவை, நவம்பர்.3:  கோவையில் லஞ்சம் வாங்கிய இரண்டு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சின்னராஜ். இவரும் தலைமை ஏட்டு கனகராஜ் என்பவரும் நேற்று இரவு கள்ளப்பாளையம் பிரிவு அருகே வாகனத்தனிக்கை நடத்தினர். 

அப்போது அவ்வழியாக கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி லஞ்சம் பெற்றனர். 

இவர்கள் லஞ்சம் வாங்குவதை அவ்வழியாக சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி பார்த்தார். 

உடனடியாக இருவரிடமும் விசாரித்ததில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். 

இது குறித்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, லஞ்சப்புகாரில் சிக்கிய இரண்டு போலீசாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...