கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டத்தின் 53-வது வார்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மத்திய மண்டலம் 53-வது வார்டுக்குட்பட்ட வி.கே.கே. மேனன் ரோடு, ஆவாரம்பாளையம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புகளின் நீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதைப் பார்வையிட்ட அவர், ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களைச் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அதேபகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்திலுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அகற்ற உத்தரவிட்டதோடு, குப்பைகளைத் தேக்கிய சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.ப.காந்திமதி, நகர்நல அலுவலர் டாக்டர்.க.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மத்திய மண்டலம் 53-வது வார்டுக்குட்பட்ட வி.கே.கே. மேனன் ரோடு, ஆவாரம்பாளையம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புகளின் நீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதைப் பார்வையிட்ட அவர், ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களைச் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அதேபகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்திலுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அகற்ற உத்தரவிட்டதோடு, குப்பைகளைத் தேக்கிய சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.ப.காந்திமதி, நகர்நல அலுவலர் டாக்டர்.க.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.