தொடர் கனமழை எதிரொலி - 6 மாவட்டங்களில் 3-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

நவம்பர் 2 : தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையில் பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதனால், 3-வது நாளாக இன்றும் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 29-ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று அறுந்து விழுந்திருந்த மின்சார வயரை மிதித்த இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை மற்றும அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மழைக் காலங்களில் வீடுகளை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனிடையே, மேலடுக்கு சுழற்சி,  தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும், தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தொடர் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...