கோவை, நவம்பர் 2: ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை உயர்வைக் கண்டித்து ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக குடிமை பொருள் அங்காடிகள் வழங்கப்பட்டு வந்த மானிய விலை சர்க்கரை கிலோ ரூ.13.50 இருந்து ரூ. 25 ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகச் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் சரிவர வழங்காததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தங்களது ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழக குடிமை பொருள் அங்காடிகள் வழங்கப்பட்டு வந்த மானிய விலை சர்க்கரை கிலோ ரூ.13.50 இருந்து ரூ. 25 ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகச் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் சரிவர வழங்காததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தங்களது ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.