ரூ. 900 கோடி செலவில் உப்பிலிபாளையம் முதல் மருத்துவக்கல்லூரி வரை மேம்பாலம்: முதலமைச்சர் அறிவிப்பு


கோவை, நவம்பர் 1 : கோவையில் 900 கோடி மதிப்பீட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை புதிய மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

காந்திபுரத்தில் ரூ.195 கோடி மதி்ப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அதில் பார்க்கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் கொண்ட முதல் அடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை  இன்று மாலை திறந்து வைத்தார். 



புதிய பாலம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்  மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல் அடுக்கு மேம்பால கல்வெட்டு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான கல்வெட்டினை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

ரூ.120 கோடியில் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், பாலத்தின் இரண்டாம் அடுக்கும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.என்று   முதலமைச்சர்  அறிவித்தார்.



மேலும், ரூ.121 கோடியில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும். அதேபோல, உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை 9 கீ.மீ தூரம் வரை ரூ.900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

மேற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பட்டு வருகின்றது. பாலங்கள், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கோவை மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 24 மணி நேரமும் செயல்படும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகின்றார். அவினாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். எதிர்கட்சிகளின் எந்த விமர்சனமும் தங்களிடம் எடுபடாது, என்றார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், பாலத்தின் வழியாக சிறிது தூரம் பயணம் செய்தார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...