கோவை, நவம்பர் 1: வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டது.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் விழா வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது. இதில், 450 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியும், 440 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் மயில்கணேஷ், பொன்கணேஷ், வியாபார சங்கத் தலைவர் ஜெபராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சிவன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராபின் நன்றியுரையாற்றினார்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் விழா வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது. இதில், 450 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியும், 440 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் மயில்கணேஷ், பொன்கணேஷ், வியாபார சங்கத் தலைவர் ஜெபராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சிவன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராபின் நன்றியுரையாற்றினார்.