கோவை, நவம்பர் 1: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட கோபனாரி வனப்பகுதியில், அடுப்பு எரிக்க விறகு சேகரிக்க சென்ற மசானியம்மாள் (80) என்ற பெண் எதிர்பாராதவிதமாக காட்டு யானையிடம் சிக்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று மசானியம்மாளின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தினால் அப்பகுதி மக்கள் கடும் பீதி மற்றும் சோகத்தில் உள்ளனர்.