கோவை, அக்டோபர் 31: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சொரனூர் வரை செல்லும் பயணிகள் ரயில், பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - சொரனூர் மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் நாளை (01.11.2017) முதல் வரும் நவம்பர் 10-ம் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் : 66605/66604 கோவை - சொரனூர் - கோவை ரயில், பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பாலக்காடு - சொரனூர் வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - சொரனூர் மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் நாளை (01.11.2017) முதல் வரும் நவம்பர் 10-ம் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் : 66605/66604 கோவை - சொரனூர் - கோவை ரயில், பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பாலக்காடு - சொரனூர் வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.