கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவ., 1) திறந்து வைக்கின்றார்.

கடந்த 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காந்திபுரத்தில் மூன்றடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்ததால், மூன்றடுக்கு மேம்பாலம் என்பதை இரண்டடுக்கு மேம்பாலம் எனத் திட்டம் மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. சுமார், ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
காந்திபுரம் பார்கேட் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் வரையிலான பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 54 தூண்களுடன் 16.6 மீ., அகலத்துடன், நான்கு வழித்தடமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து,வர்ணம் பூசப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில், நாளை (நவ., 1) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இன்று நடைபெற்று வருகின்றது. பாலம் முழுவதும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காந்திபுரத்தில் மூன்றடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்ததால், மூன்றடுக்கு மேம்பாலம் என்பதை இரண்டடுக்கு மேம்பாலம் எனத் திட்டம் மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. சுமார், ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
காந்திபுரம் பார்கேட் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் வரையிலான பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 54 தூண்களுடன் 16.6 மீ., அகலத்துடன், நான்கு வழித்தடமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து,வர்ணம் பூசப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில், நாளை (நவ., 1) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இன்று நடைபெற்று வருகின்றது. பாலம் முழுவதும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.