விபத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

கோவை, அக்டோபர் 31: கடந்த 2015-ம் ஆண்டு மதுக்கரை அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத பேருந்தை கோவை முதலாவது சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது. 



மதுக்கரை அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு பேருந்து மோதி பலியான கிட்டான் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்த நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கிட்டானின் மனைவி பாப்பாத்தி கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 5 லட்சத்து 11 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், அதை போக்குவரத்து கழகம் வழங்காததால், பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள், அரசுப் பேருந்தை பறிமுதல் செய்தனர். 

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...