கோவை சிட்கோ தொழிற்சாலை வளாகம் மற்றும் கிழக்கு மண்டலம் நேரு நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ப.காந்திமதி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, இன்று மதுக்கரை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஈச்சனாரி சிட்கோ தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதை கண்டு அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரம் பேணிக்காக்காமல், ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழலை கொண்டிருந்த நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதமும் விதித்தார்.
இதேப்போன்று, மாநகராட்சி துணை ஆணையர் கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, இன்று மதுக்கரை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஈச்சனாரி சிட்கோ தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதை கண்டு அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரம் பேணிக்காக்காமல், ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழலை கொண்டிருந்த நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதமும் விதித்தார்.
இதேப்போன்று, மாநகராட்சி துணை ஆணையர் கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.