"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்பு விசாரணை துவங்கப்படும்"


கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்புதான் விசாரணை துவங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் காலமானார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அவருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வந்த அவர் பணிகளைத் தொடங்கினார்.

இதனிடையே இன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து விசாரணை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கோவையில் ஒரு துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறுமுகசாமி கோவை வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பெறப்பட்ட பின்னரே விசாரணை துவங்கப்படும். இரு நாட்களுக்குப் பிறகு சென்னை சென்ற பின்புதான் இதுகுறித்தான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...