கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறுவன் மேல் மோதிச் சென்றதால் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறையை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ரோப்பமட்டம் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று கோழியை வேட்டையாட சிறுத்தை வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கோழியை பிடித்து விட்டு திரும்பிய சிறுத்தை அச்சிறுவனின் மேல் மோதிச் சென்றது. இதில் நிலைகுலைந்த தினேஷ்குமார் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உருளிக்கல் மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ரோப்பமட்டம் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று கோழியை வேட்டையாட சிறுத்தை வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கோழியை பிடித்து விட்டு திரும்பிய சிறுத்தை அச்சிறுவனின் மேல் மோதிச் சென்றது. இதில் நிலைகுலைந்த தினேஷ்குமார் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உருளிக்கல் மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.