பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று கோவை விமானநிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்சி சாலை, ஒலம்பஸ் அடுத்த ருக்மணி நகரில், மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் மறைவிற்கு, அவரது வீட்டிற்கு சென்று மகாலிங்கம் மகன் மாணிக்கம், மருமகன் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், மாரியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் மேட்டுப்பாளையம் சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக கமுதி, பசும்பொன்னிற்கு செல்கின்றார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று கோவை விமானநிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்சி சாலை, ஒலம்பஸ் அடுத்த ருக்மணி நகரில், மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் மறைவிற்கு, அவரது வீட்டிற்கு சென்று மகாலிங்கம் மகன் மாணிக்கம், மருமகன் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், மாரியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் மேட்டுப்பாளையம் சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக கமுதி, பசும்பொன்னிற்கு செல்கின்றார்.