பா.ஜ.க.வைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வரும் நவம்.,3-ம் தேதி போராட்டம்

கோவை, அக்டோபர் 28: விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பா.ஜ.க.வினர் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து வரும் நவம்பர் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில்,  கமல்ஹாசன் மக்கள் பணியாற்றுவதை விசிக சார்பில் வரவேற்கிறேன். இத்தனை காலம் கலைத்துறையில் இருந்தவர், தற்போது அரசியல் துறையில் தீவிரமாக களம் இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் ஆங்காங்கே திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மெர்சல் படம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு அரசியல் ரீதியான கருத்தைதான் பதிவு செய்தேன். மெர்சல் திரைபடத்தில் நடிகர் விஜய் பெரிதாக ஏதும் பேசிவிடவில்லை. ஆனால், இந்த படத்தை பா.ஜ.க.வினர் ஏன் இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக என்மீது தனிநபர் விமர்சனத்தை வைத்தார்.

இதைக் கண்டித்து வி.சி.க.வினர் ஆங்காங்கே அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். ஆனால் கரூரிலும், மயிலாடுதுறையிலும் நேரடியாக பா.ஜ.க.வினர், வி.சி.க. மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழக காவல்துறை அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா இல்லை, பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. மேலும், பா.ஜ.க.வினர் நேரடியாகவும், சமூகவலைதளங்கள் மூலமாகவும், தேவையற்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.

வி.சி.க. தேர்தலுக்காக கட்சி நடத்தவில்லை, மக்கள் பணியாற்ற நாங்கள் நெடுந்தூரம் இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,  தமது கட்சியினருக்கு பல மக்கள் பணிகள் இருக்கிறது. குறிப்பாக, கந்துவட்டி பிரச்சினை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதை ஒடுக்க வேண்டும். யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற விமர்சனங்களை மற்றவர்கள் மீது வைக்க கூடாது. மக்களுக்கு யார் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியும். இதை மக்கள் பார்வைக்கு விட்டுவிடலாம்.

மேலும், பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வி.சி.க.வினர் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.  ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. இது ஆட்சி நிர்வாகம் வலுவிழுந்ததைக் காட்டுகிறது. உடனடியாக சர்க்கரை விலை உயர்வைக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...