தூய்மையான பசுமையான தீபாவளியை கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு


கோவை, அக்டோபர் 28: சுற்றுசூழல் மாசுபடாத வகையில் பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மருத்துவர்.க.விஜயகார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

கோவை மாநகராட்சி சார்பாக சுற்றுசூழல் மாசுபடாமல் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன்படி பசுமை தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமிருந்து 140 பரிந்துரைகள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்டன. 

இவர்களில், சிலர் சுற்றுசூழல் மாசுபடாத வகையில் ஏழைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியிருந்தனர். பசுமை தீபாவளி கொண்டாட்டங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இறுதியாக 14 தனிநபர்கள், 6 தன்னார்வ நிறுவனங்கள், 9 தனியார் நிறுவனங்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1 குடியிருப்பு சங்க நிர்வாகிகள், ஆகமொத்தம் 34 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...