ஆர்த்தோ ஒன் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பணிமனை அருகே நடந்த இந்த முகாமில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், சத்யா விக்னேஷ், சிவக்குமார், கணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

இந்த மருத்துவ முகாம் குறித்து ஆர்த்தோ - ஒன் நிறுவனர் டேவிட் வி ராஜன் கூறுகையில், பொதுவாகவே, ரயில்வேத்துறையில் பணிபுரிபவர்கள் உடலை உழைப்பால் கொடுக்கும் பணியை நாள்தோறும் செய்வர். இதனால், அவர்களுக்கு, தோள்பட்டை, முதுகு, கை, கால்கள் இணைப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல, மற்ற துறை பணியாளர்களுக்கும், அவரவர் வேலைக்கேற்றவாறு எலும்பு பிரச்சனைகள் வரும். எனவே, பணி செய்யும் இடங்களில் நல்ல உடல்நிலையுடன் வேலை செய்யும் நோக்கில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. 



ஆர்த்தோ - ஒன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையானது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, எலும்பு முறிவு சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



பிரபல தனியார் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆர்த்தோ - ஒன் மருத்துவமனையானது, தென்னிந்தியாவில் உள்ள சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...