கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பணிமனை அருகே நடந்த இந்த முகாமில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், சத்யா விக்னேஷ், சிவக்குமார், கணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த மருத்துவ முகாம் குறித்து ஆர்த்தோ - ஒன் நிறுவனர் டேவிட் வி ராஜன் கூறுகையில், பொதுவாகவே, ரயில்வேத்துறையில் பணிபுரிபவர்கள் உடலை உழைப்பால் கொடுக்கும் பணியை நாள்தோறும் செய்வர். இதனால், அவர்களுக்கு, தோள்பட்டை, முதுகு, கை, கால்கள் இணைப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல, மற்ற துறை பணியாளர்களுக்கும், அவரவர் வேலைக்கேற்றவாறு எலும்பு பிரச்சனைகள் வரும். எனவே, பணி செய்யும் இடங்களில் நல்ல உடல்நிலையுடன் வேலை செய்யும் நோக்கில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.

ஆர்த்தோ - ஒன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையானது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, எலும்பு முறிவு சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல தனியார் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆர்த்தோ - ஒன் மருத்துவமனையானது, தென்னிந்தியாவில் உள்ள சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பணிமனை அருகே நடந்த இந்த முகாமில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், சத்யா விக்னேஷ், சிவக்குமார், கணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த மருத்துவ முகாம் குறித்து ஆர்த்தோ - ஒன் நிறுவனர் டேவிட் வி ராஜன் கூறுகையில், பொதுவாகவே, ரயில்வேத்துறையில் பணிபுரிபவர்கள் உடலை உழைப்பால் கொடுக்கும் பணியை நாள்தோறும் செய்வர். இதனால், அவர்களுக்கு, தோள்பட்டை, முதுகு, கை, கால்கள் இணைப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல, மற்ற துறை பணியாளர்களுக்கும், அவரவர் வேலைக்கேற்றவாறு எலும்பு பிரச்சனைகள் வரும். எனவே, பணி செய்யும் இடங்களில் நல்ல உடல்நிலையுடன் வேலை செய்யும் நோக்கில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.

ஆர்த்தோ - ஒன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையானது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, எலும்பு முறிவு சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல தனியார் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆர்த்தோ - ஒன் மருத்துவமனையானது, தென்னிந்தியாவில் உள்ள சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.