அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது - முதல்வர் அசோகன்

கோவை, அக்டோபர்.28: கோவை அரசு மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் தனியார் மருத்துவமனையின் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் B.அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் சில இடைத்தரகர்கள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து லாப நோக்கத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர். அங்கு, பல்வேறு காரணங்களையும், மருத்துவ மொழியில் புரியாத பெயர்களையும் கூறி நோயாளிகளிடம் பணம் சுரண்டப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் (40) என்வரை மூளைச்சலவை செய்ய வந்த இடைத்தரகர் ஜான் என்கிற முருகன் என்பவரை போலீசார் கைது செத்தனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.B.அசோகன் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் பல நோயாளிகள வருவதை பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் மருத்துவமனைகள். இடைத்தரகர்களை அனுப்பி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து அவர்களின் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

முற்றிலும் லாப நோக்கில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் சில தனியார் மருத்துவமனைகள் இறுதியில் அவர்களுக்கு தருவது ஏமாற்றம் மட்டுமே. 

விபத்தில் சிக்கி இம்மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் போது மறைந்திருக்கும் சில நபர்கள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிடம் பேசி அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

வழக்கறிஞர்கள் 

இதேபோல், வழக்கறிஞர்கள் சிலர் விபத்தில் சிக்கியவர்களிடம், வழக்கு நடத்தி காப்பீடு பெற்றுத் தருவதாக கூறுகின்றனர். வழக்கு நடத்துவதற்கான மொத்த செலவினங்களையும் அவர்களே ஏற்று நடத்துகின்றனர். காப்பீட்டு தொகை கைக்கு வந்ததும் கணிசமான தொகையினை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். வழக்கின் தன்மைக்கு ஏற்ப தான் முதலீடு செய்த பணத்திற்கு வட்டிபோட்டு பணம் வசூலிக்கும் சிலரும் உள்ளனர். காப்பீடு காலம் முடிவடைதல் உள்ளிட்ட சில காரணங்களால் காப்பீட்டுத்தொகை கிடைக்காதபோது தனியார் மருத்துவமனைக்கான செலவு, வழக்கறிஞர்களுக்கு ஆன செலவு என மொத்த தொகையும் அந்த நோயாளியின் தலையில் விழுந்துவிடுகிறது. 

கண்காணிப்பு குழு

மக்கள் இதுபோன்ற நபர்களிடம் ஏமார்ந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் இதுபோன்ற இடைத்தரகர்கள் புகுந்து நோயாளிகளை மூளைச்சலவை செய்யாமல் இருப்பதற்கு கண்காணிப்பு குழு ஒன்று உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர். தாமாக தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களை தவிர, மற்ற நோயாளிகளை மூளைச்சலவை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு டாக்டர் B.அசோகன் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...