காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி வரும் நவம்பர் 1ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டம், காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, நஞ்சப்பா சாலை பார்க்கேட் பகுதியில் இருந்து ஆம்னி பேருந்து நிலையம் வரை 1,756 மீட்டர் தூரத்திற்கு ஒரு மேம்பாலமும், 100 அடி சாலை கல்யாண் பகுதியில் இருந்து சின்னசாமி சாலை ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் பகுதி வரை 1,226 மீட்டர் தூரத்திற்கு மற்றொரு மேம்பாலமும் ரூ.162 கோடி செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட தலைமை அதிகாரி கண்ணன், மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து பார்க்கேட்- ஆம்னி பேருந்து நிலையம் வரையிலான நீண்ட மேம்பாலம் 2017 மே 15ம் தேதிக்குள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது 54 தூண்களுடன், 16.6 மீட்டர் அகலத்துடன் முதல்கட்ட மேம்பாலத்துக்கான பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வர்ணம் பூசப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.
இதனை வரும் நவம்பர் 1ம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

கோவை மாவட்டம், காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, நஞ்சப்பா சாலை பார்க்கேட் பகுதியில் இருந்து ஆம்னி பேருந்து நிலையம் வரை 1,756 மீட்டர் தூரத்திற்கு ஒரு மேம்பாலமும், 100 அடி சாலை கல்யாண் பகுதியில் இருந்து சின்னசாமி சாலை ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் பகுதி வரை 1,226 மீட்டர் தூரத்திற்கு மற்றொரு மேம்பாலமும் ரூ.162 கோடி செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட தலைமை அதிகாரி கண்ணன், மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து பார்க்கேட்- ஆம்னி பேருந்து நிலையம் வரையிலான நீண்ட மேம்பாலம் 2017 மே 15ம் தேதிக்குள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது 54 தூண்களுடன், 16.6 மீட்டர் அகலத்துடன் முதல்கட்ட மேம்பாலத்துக்கான பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வர்ணம் பூசப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.
இதனை வரும் நவம்பர் 1ம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.