காட்டு யானை முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு அபராதம்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு தமிழக வனத்துறையினர் அபாரதம் விதித்தனர். 

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள கோவை வனச்சரகத்தில் யானை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. அவைகள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளுக்கோ அல்லது சாலைகளுக்கோ வந்து செல்லும். அப்போது, தற்போதைய இளைஞர்கள் செல்பி எடுப்பதற்காக, வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வந்தது. 



இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார் ஆகியோரை பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

இதனிடையே, புகைப்படம், செல்பி எடுப்பது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், யாரேனும் நடந்து கொண்டாலோ, அல்லது அவசர உதவிக்கோ 180042545456 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...