விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் பிரச்சாரம்

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கடும் வறட்சி, விவசாயக் கடன் போன்றவைகளால் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, விவசாயம் அழிந்து, உணவிற்காக அடுத்த மாநிலத்தையோ, நாட்டையோ சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்று தற்போதைய இளைஞர்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் குர்ஷித் ஹுசேன், சுரேஷ், புருஷோத், ஆண்ட்ரு, இம்ரான், ஓஸ்வல் ஹுசேன் மற்றும் ராஜா ஆகிய 7 இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்தனர். 



அதன்படி, கடந்த 22-ம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள், வரும் நவம்பர் 2-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதுவரை 900 கி.மீ. பயணம் செய்துள்ள இளைஞர்கள், ஊட்டியில் இருந்து இன்று (அக்.,26) மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களை, ஊட்டி செல்லும் பேருந்துநிறுத்தம் அருகே கோவை இளைய தலைமுறை மற்றும் கோவை பைக்கர்ஸ் கிளப்பினர் வரவேற்றனர். 



இது தொடர்பாக இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இம்ரான் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் எங்களுடையதே,. விவசாயிகளிடம் பேரம் பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதுபோன்று செய்வதால், ஏழை விவசாயி, மேலும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில், விவசாயம் பற்றி கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...