நண்பர்களுக்குள் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை கைது செய்ய சகமாணவர்கள் கோரிக்கை

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-தாரா தம்பதியினர். இவர்களது மகன்கள் ரஞ்சித்குமார் (22), அரவிந்த். ரஞ்சித் குமார் கோவைப்புதூர் பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்கி தொலைதூர கல்வி மூலம் பிபிஏ படித்து வந்தார். 

இந்த நிலையில், இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரது தங்க சங்கிலி காணாமல் போனது. இதில் ரஞ்சித் குமார் மீது சந்தேகம் கொண்ட அபுபக்கர், கடந்த 12ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களான ஆதித்யா, தர்வேஷ், அசார், சபீக் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரஞ்சித்குமாரை தாக்கினர். இதில் ரஞ்சித் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



இந்த தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூற, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கடந்த 14ம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு நேற்று (புத்தனன்று) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 



இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே, முதற்கட்டமாக தாக்குதலில் தொடர்புடைய ஆதித்யா-வை மதுக்கரை போலீசார் கைது செய்திருந்தனர். 



தற்போது மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ரஞ்சித்குமாரின் உயிரிழப்பு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.

இதனால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...