வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.
இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது.
வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.
இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது.
வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.