பெங்களூரூ விமான நிலையத்தின் ஏர்-கார்கோ முனையம் கோவையில் தொடக்கம்

பெங்களூரூ சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையம் கோவை மாவட்டம் இருகூரில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள கண்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் ஒருங்கிணைந்த கண்டெய்னர் டெப்போவில் இருந்து பெங்களூரூ சர்வதேச விமான நிலையம், தனது சரக்கு முனையத்தை கடந்த 5-ம் தேதி சுங்க அனுமதி பெற்ற சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது. 

இதன்மூலம், கோவை ஏற்றுமதியாளர்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் தங்கள் சரக்குகளை கோவை, இருகூரிலேயே சுங்கத்தீர்வை செய்து கொள்ளலாம். சுங்கத்தீர்வை செய்யும் சரக்குகள் உடனுக்குடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு சுங்க அனுமதி பெற்ற லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

அங்கிருந்து புறப்படும் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர். இதுவரை இந்த வசதியை பயன்படுத்தி கனடா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின்  போன்ற நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கோவையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் சரக்குகளை கோவையில் இருந்தே ஏற்றுமதி செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பயன்பெறுவதாக முனையத்தின் அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...