தமிழகம் முழுவதும் பரவி கிடக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசே நிலவேம்பு கசாயத்தை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த கசாயத்தால் பின்விளைவுகள் ஏற்படும் என செய்திகள் வெளியாகின.
இதுப்பற்றி நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டரில், மருத்துவ ஆய்வுகள் வரும் வரை நிலவேம்பு கசாயத்தை தனது ரசிகர்கள் வழங்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, கமல் மீது தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலவேம்பு பற்றி அவதூறு பரப்பும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்.,25) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிலவேம்பு தொடர்பாக கமல் கூறிய கருத்தில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார்.
இதுப்பற்றி நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டரில், மருத்துவ ஆய்வுகள் வரும் வரை நிலவேம்பு கசாயத்தை தனது ரசிகர்கள் வழங்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, கமல் மீது தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலவேம்பு பற்றி அவதூறு பரப்பும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்.,25) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிலவேம்பு தொடர்பாக கமல் கூறிய கருத்தில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார்.