பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருநங்கைகள் மூவர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் நேற்று (செவ்வாயன்று) இரவு 8 மணியளவில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை வழியாக சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த திருநங்கைகள் மூன்று பேர் சிவக்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சிவக்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக கணபதி பகுதியைச் சேர்ந்த கல்பனா (30), மாயா (32), தனுஸ்ரீ (27) ஆகிய மூன்று திருநங்கைகளை கைது செய்து சிறையிலடைத்தனர்.

முன்னதாக, நேற்று (செவ்வாயன்று) காலை தங்களை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட திருநங்கைகள் கல்பனா, மாயா, தனுஸ்ரீ ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...